search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • எருமை மாடு, ஆடுகள் பலியிட்டு நரிக்குறவர்கள் வினோத வழிபாடு நடந்தது.
    • 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட் டன.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே பழ மலைநகரில் நரிக்குறவ மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய் வத்திற்கு, எருமை மாடு வெட்டி பொங்கல் வைக்கும் வினோத பூஜையை நடத்தி–னர். அப்போது 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் குல தெய்வத்திற்கு ஆண்டுதோறும் கிடா வெட்டி, பூஜை செய்து வரு–கிறோம். இங்கு பூஜைகள் நடத்தும் போது வெளியூர்க–ளில் உள்ள எங்கள் உறவி–னர்கள் கலந்து கொண்டு குலதெய்வம் காளியம்ம–னுக்கு எருமை கிடாவையும், துர்கையம்மனுக்கு ஆட்டுக் கிடாவையும் பலியிட்டு பூஜை செய்வார்கள்.

    மேலும் இதற்காக, 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை ஆட்டு கிடாக்க–ளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளையும் வாங்கியுள்ளோம். இன்று அதிகாலையில் கிடா வெட்டி, ரத்தத்தை குடித்து காளியம்மனுக்கு படையல் வைத்தும், தொடர்ந்து ரவை ரொட்டிகளை செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்க–ளாக இங்கே பூஜைகள் செய்து வருகிறோம்.

    பூஜைக்குப் பின் எருமை மாடுகளை உரித்து, உடல் உறுப்புகளை, உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் செல் வோம். எருமையின் தலையை எதற்கும் பயன்ப–டுத்த மாட்டோம். மிஞ்சும் பாகங்களை உலர்த்தி பயன் படுத்திக் கொள்வோம்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எங்க–ளின் உறவினர்கள் உள்ள–னர். வசதி படைத்தவர்களாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கிடா வெட்டி காளி–யம்மனுக்கு பூஜைகள் செய்து வருறோம். இந்த பூஜையில் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குலதெய்வத்தை வழிபட் டால் நோய் நொடியின்றியும், ஊசி மணி பாசி தொழிலும் சிறப்பாக அமையும் என்பது நீண்ட கால நம்பிக்கை என்று தெரிவித்தனர்.

    • இளையான்குடி-சிவகங்கை இடையே வட்டபேருந்து இயக்க வேண்டும்.
    • மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைத்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் சைபுல்லா, நிர்வாகிகள் கலெக்டர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    இளையான்குடி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் பெயரை மீண்டும் தென்மலைக்கான் காதர்ஷாப் பொன்னம்பாள் பீவி பெண்கள் பள்ளி என மாற்ற வேண்டும்.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள குப்பை இடங்களை மாற்ற வேண்டும். இளையான்குடி பேரூராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட தெருக்களுக்கு பெயர்கள் சூட்ட வேண்டும். 5. சிவகங்கை, காளை யார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி, மானாமதுரை திருப்புவனம் ஆகிய ஊர்களுக்கு வட்டப்பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 6. இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள தெய்வ புஷ்பா ஊரணியை தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை நகர செயலாளர் அல்லா பிச்சை, காரைக்குடி நகர செயலாளர் சாகுல் ஹமீது, இளையான்குடி நகர பொருளாளர் கான்சா உஸ்மான், நகர துணைச் செயலாளர் ஆட்டோ அபுபக்கர், தகவல் தொழில் நுட்ப அணி நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடனிருந்தனர்

    • மகளிர் கபடி போட்டியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
    • இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியும், அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, பீகார், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    பிரமாண்ட கேலரியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது கைதட்டியும், விசில் அடித்தும், ஆரவா ரத்துடன் போட்டியை கண்டுகளித்தனர். இரவில் நடந்த இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டி பாளையம் அணியும் அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    இதில் கோபிசெட்டி பாளையம் 27 புள்ளிகள் பெற்றது. அந்தியூர் அணி 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து முதல் பரிசை அந்தியூர் பள்ளி மாணவிகளும், 2-வது பரிசை கோபிசெட்டி பாளையம் கல்லூரி மாணவிகளும், 3-வது பரிசை மேற்கு ெரயில்வேயும் 4-வது பரிசை சென்னையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 2 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சமும், 3-வது பரிசாக ஒரு லட்சமும், 4-வது பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பைகள் சிறப்பு பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அந்தியூர் அணியில் 34 முறை பிடிபடாமல் சென்ற கவுந்தர்யாவை அமைச்சர் மற்றும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்த போட்டியில், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலா ளருமான சண்முக வடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மத்திய அரசு வேலைவாய்ப்பு முகாம்களில் 5.60 லட்சம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடி இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய இணை மந்திரி சோபா கரண்ட்லஜே கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் 8-வது முகாம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 206 நபர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற 7 முகாம்களின் மூலம் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், காவல்துறை துணைத்தலைவர் (சத்தீஸ்கர்) விஜயகுமார் டோக்ரா, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், மத்திய வேளாண்மை இயக்குநர் வெங்கட சுப்ரமணியன், இந்தோ திபத் எல்லைக்காவல் படையைச் சார்ந்த துணை கமாண்டெண்ட்கள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்ட் ராகுல் ராணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் சீனிவாசா திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பூலாங்கு றிச்சியில் திருக்கல்யாணம் நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு பூலாங்குறிச்சி கலைக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைத்து வாழை மர தோரணங்கள் மின்விளக்குகள் கொண்டு பந்தல் முழுவதும் அலங்க ரிக்கப்பட்டன. வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட மண மேடையில் உற்சவர்கள் ஸ்ரீ தேவி பூதேவி சீனிவாச பெருமாள் சர்வ அலங்கா ரத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினார்கள்.

    தொடர்ந்து யாக பூஜை கள் திருமண சடங்கான காப்பு கட்டுதல் கன்னிகா தானம், பட்டு வஸ்திரம், பட்டுச்சேலைகள் சாத்தப்பட்டு பின்னர் திருமாங்கல்ய மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தி யம் முழங்க வேத மந்தி ரங்கள் ஒலிக்க பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க தேவி யர்களுக்கு திருமாங்கல்யம் அணி விக்கப்பட்டது.

    தொடர்ந்து கற்பூர தீபாராதனை காண்பித்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் வாரணம் ஆயிரம் பூஜைகள் நடைபெற்று கோடி தீபம் கும்ப தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்ச னைகள் செய்யப்பட்டன. நிறைவாக ஏகமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது.

    இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கல்யா ணத்தை கண்டு வழிபட்டனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் திருப்பதி யில் இருந்து கொண்டு வரப்பட்ட லட்டு பிரசா தங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அபிராமி ராமநாதன் செய்திருந்தார்.

    • யோகா போட்டிகள் நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

    சிவகங்கை

    சிவகங்கை தனியார் மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் யோகா மற்றும் நேரு யுவ கேந்திரா சார்பில், தென் இந்திய அளவிலான யோகா போட்டிகள் நடந்தது. மாணவர்களுக்கு யோகா பயிற்சியின் முக்கி யத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும் இந்த யோகா போட்டி நடத்தப் பட்டது.

    இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் கலந்துகொண்டு பார்வை யாளர்கள் முன் பல்வேறு வியக்கத்தகு யோகா சனங்களை செய்து அசத்தினர்.

    கராத்தே சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு சிறப்பாக யோகாசனம் செய்த வர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நேருகேந்திரா பிரவீன் குமார், கேப்டன் சரவணன், ரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

    • சாகிர்உசேன் கல்லூரியில் புதிய நிர்வாகக்குழு தேர்வு நடந்தது.
    • புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தி டாக்டர் சாகிர் உசேன் காலேஜ் சொசைட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது. கல்லூரி சட்ட விதியின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட துணைப்பதிவாளர் மேற்பார்வையில் பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக அஹமது, ஜலாலுதீன் செயலாளராக ஜபருல்லா கான், பொருளாளராக அப்துல் அஹது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நசீர் கான், அஸ்ரப் அலி, உஸ்மான் அலி, ஜாபர் ஹுசைன், அப்துல் சலீம், அபுபக்கர் சித்திக், சிராஜுதீன், அவுரங்கசீப், ஹமீத் தாவூத் ஆகியோர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    • தேவகோட்டை நகராட்சி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள் ளன. இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். தமிழக அரசு முதலமைச் சரின் காலை உணவு திட் டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து தேவகோட்டை நகராட்சியில் ஜீவா நகரில் உள்ள ஒருங்கி–ணைந்த சமையல் கூடத்தில் இருந்து உணவுகள் நகராட்சி பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்லப்பட்டது. 16-வது நகர்மன்ற தொடக் கப்பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்றத் துணைத் தலை–வர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதல்–மைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத் தனர். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந் தினார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளை–யாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந் திய கிரிக்கெட் வீரர் நடரா–ஜன் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்ட விளை–யாட்டு மற்றும் இளை–ஞர் நலன் அலுவலர் ரமேஷ் கண்ணன் கௌரவ விருந்தி–னராக கலந்துகொண்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

    விழாவையொட்டி நடை–பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க–ளுக்கு சிறப்பு பரிசினை கிரிக்கெட் வீரர் நடராஜன் வழங்கினார். பெற்றோர்க–ளுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. விழாவில், கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசுகையில், கடின உழைப்பபை பின்பற் றினால் வாழ்வில் எத்துறை–யிலும் சாதிக்கலாம் என்றும், விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புபவர்கள் உடல் ஆரோக்கியத்தை கவ–னமாக பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும் விளையாட்டு துறைக்கு உடலே மூலதனம், நேரம் தவறாமை, ஒழுக்கம், கடின உழைப்பு இவை மூன்றும் ஒரு மனிதனை உயர்த்தும் செயல்பாடுகள். திறமை இருந்தால் எந்த மூலையில் இருந்தாலும் உலகப்புகழ் பெறலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். வாழ்வில் கஷ் டப்பட்டால் மட்டுமே வெற்றி நிலைக்கும் எனவும் மாணவர்களுக்கு ஆர்வமூட் டூம் வகையில் பேசி–னார்.

    பள்ளியின் சேர்மன் குமரேசன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், புகழ்பெற்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அப்புகழைப் பெற மாணவர்கள் பெரும் முயற் சியை மேற்கொள்ள வேண் டும் என்றார்.பள்ளியின் துணை சேர்மன் அருண் குமார் பேசும்போது, எந்த துறையில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் உங்களின் பணிவே உங்களை சமுதா–யத்தில் உயர்த்தும் என்றார். பள்ளியின் முதல்வர் உஷா குமாரி வரவேற்புரை வழங் கினார். துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறி–னார். நிகழ்ச்சியில் மாண–வர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலு–வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தேவகோட்டையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவ மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். இங்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.16-வது நகர்மன்ற தொடக்கப் பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந்தினார்.

    • திருப்புவனம் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு ஆரம்பப் பள்ளி மற்றும் தெற்கு ஆரம்பப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் லதா, பால் பாண்டி, நகர் தி.மு.க. செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி மன்ற துணை சேர்மன் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிதாசன், கண்ணன், வேல்பாண்டி, பாலகிருஷ்ணன், ராம லட்சுமி பாலகிருஷ்ணன், பத்மாவதி முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×