என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் அறுபத்து மூவர் விழா
- திருச்செங்கோட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் 10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா நடந்தது.
- அறுபத்து மூவர் திருமேனிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவகண வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் 10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா நடந்தது.
இதனை ஒட்டி நேற்று முன்தினம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், கடன் சுமை, உடல் நலக் குறைபாடுகள் நீங்க மல்லிகை, முல்லை, தும்பை, அரளி, தாமரைப்பூ, எருக்கன் பூ, சங்குப்பூ, ஜாதிப்பூ, விரிச்சி பூ, சிகப்பு அரளி, நொச்சி ஆகியவற்றை கொண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.
நேற்று காலை கணபதி வழிபாடு, கலச ஆவாகனம், மூலமந்திர ஹோமம், தொடர்ந்து மூலவர் திருமேனிகள், ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் மற்றும் தொகை அடியார்கள், உற்சவர் திருமேனிகளுக்கு திருமஞ்சனம் மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
இதில் ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் திருமேனிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவகண வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்து வழிபாடு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்