என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சொத்து தகராறில் முதியவர் கொலை செய்த மகன் கைது
- அங்கு சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
- சிவானந்தா தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புக்கசாகரம் திப்பேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா (வயது90). விவசாயி. இவருடைய மனைவி பாப்பம்மா. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். மேலும் வெங்கட்ரமணப்பாவிற்கு சொந்தமாக 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து சொத்து பிரிப்பு தொடர்பாக வெங்கட்ரமணப்பாவுக்கும், மூத்த மகன் சிவானந்தாவுக்கும் (45) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சிவானந்தா தனது தந்ைத மீது ஆத்திரத்தில் இருந்தார்.
இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவானந்தா தந்தை வெங்கட்ரமணப்பாவை வீட்டுக்கு அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தனியாக அழைத்து சென்றார்.
அப்போது அங்கு சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவானந்தா தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கட்ரமணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய சிவானந்தாவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்