search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகையையொட்டி கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள்
    X

    ஓணம் பண்டிகையையொட்டி கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள்

    • கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    கோவை,

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணத்தை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்(எண்:07121), இன்று மாலை 4.35 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம்-செகந்திரா பாத் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07122) வருகிற 29-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வரும் 31-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணாகு ளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    எஸ்.எம்.வி.டி பெங்களூரு-மங்களூரு சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரெயில்(எண்(06569), எஸ்.எம்.வி.டி பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காசர்கோடு, பைய்யனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரா, கோழிக் கோடு, திரூர், சொர்ணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரபேட் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மங்களூரு சென்ட்ரல்- எஸ்.எம்.வி.டி பெங்களூரு இடையிலான சிறப்பு ரெயில்(எண்:06570) வருகிற 29-ந் தேதி இரவு 8.05 மணிக்கு மங்களூர் சென்ட்ர லில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூரு சென்றடையும்.

    கச்சிகுடா-கொல்லம் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07044) கச்சிகுடாவில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.20 மணிக்கு கொல்லம் சென்ற டையும்.

    கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணா குளம் நகரம், ஆலுவா , திருச்சசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×