என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கடநாடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் அம்ரித் தகவல்
- தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடநாடு ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகளான சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளனர். கள ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு திட்டங்களை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகள் திட்டங்களை அரசு அறிவிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும் 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார்,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடநாடு ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகளான சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளனர். கள ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தாவணெ முதல் மல்லிகொரை வரை சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு திட்டங்களை பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகள் திட்டங்களை அரசு அறிவிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும் 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார்,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்