search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    55 பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    55 பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    • ஐ.டி.ஐ. விடுதிகள் மாணவர்களுக்கு 7-ம், மாணவிகளுக்கு 11-ம் செயல்பட்டு வருகிறது.
    • 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசால் தஞ்சை மாவடடத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்கள் விடுதி 26-ம், மாணவிகள் விடுதி 11-ம், கல்லூரி அல்லது பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகள் மாணவர்களுக்கு 7-ம், மாணவிகளுக்கு 11-ம் செயல்பட்டு வருகிறது.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத்தகுதி உடையவர்கள் ஆவர்.

    இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எந்தவித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகள் வழங்கப்படுகிறது. 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது. மலை பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரதுஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரம் மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதி உடைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து வருகிற 15-ந்தேதிக்குள் பள்ளி மாணவர்களும், அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் கல்லூரி விடுதி மாணவர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்க தேவை இல்லை. விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×