என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாநில அளவில் கையுந்து பந்து போட்டியில்18 ஆண்டுகளாக சாதனை படைத்த மாணவர்கள்:கவுன்சிலர் பிரகாஷ் பாராட்டு
- மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது.
- இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கடலூர்:
மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் கடந்த 18 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியா ளர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை படைக்க பல்வேறு திட்டங்களை வழிவகுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஆகையால் நீங்கள் உரிய முறையில் பயிற்சி பெற்று தற்போது செய்துள்ள சாதனைகளை தாண்டி பல்வேறு சாதனைகளை பெற வேண்டும். இவ்வாறு பேசினார். மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ, நிர்வாக அலு வலர் ஞானவேல், பயிற்சி அலுவலர் வேணுகோபால், ராமலிங்கம், விஜயகுமார், முருகன், அஷ்ரப் அலி, சதிஷ், செந்தில், சிலம்பு மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்பயிற்சி அலுவலர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்