என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை
- கணேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- தெய்வா சாணிப்பவுடரை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.
கோவை,
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தெய்வா (வயது 46). இவரது கணவர் கோவை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.
இதன் காரணமாக தெய்வா மிகுந்த மனவே தனை அடைந்து காணப் பட்டார். இதனால் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த தெய்வா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த கணேசன் என்ன ஆச்சு என்று கேட்டார் அதற்கு தெய்வா சாணிப்பவுடரை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெய்வா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்