search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் வீட்டில் திடீர் தீ விபத்து
    X

    தீ விபத்தில் எரிந்த பொருட்கள்.

    தூத்துக்குடியில் வீட்டில் திடீர் தீ விபத்து

    • கூலி தொழிலாளி கலைச்செல்வியின் வீடு தூத்துக்குடி அன்னை இந்திராநகரில் உள்ளது.
    • வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது40). கூலி தொழிலாளி. இவரது மகள் இலக்கியா. அப்பகுதியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    தீ விபத்து

    இவர்களுடன் கலைச்செல்வியின் தங்கை முத்துலெட்சுமி (39) என்பவரும் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். அப்போது கலைசெல்வி வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    மின்கசிவு

    இது தொடர்பாக சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×