search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடையநல்லூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ-பொதுமக்கள் போராட்டம்
    X

    லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.


    கடையநல்லூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ-பொதுமக்கள் போராட்டம்

    • புகை மண்டலமாக மாறி அப்பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
    • பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர்- கிருஷ்ணாபுரம் 5-வது வார்டு மேற்கு மலம்பேட்டை ரோடு பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் குப்பை கிடங்கு உள்ளது.

    அதனை துப்புரவு பணியாளர்கள் உரமாக்கும் கிடங்கிற்கு முழுமையாக அள்ளி செல்லாமல் விட்டு செல்கின்றனர். இதனால் மர்ம நபர்கள் மீதி குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி அப்பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு குப்பை கிடங்கில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    அதன் பின்னர் நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×