search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாம்பாக்கம் கிராமத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டவர்- மயங்கி விழுந்து பலி
    X

    மாம்பாக்கம் கிராமத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டவர்- மயங்கி விழுந்து பலி

    • கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு(வயது23) ஆவார். இந்த வாலிபருக்கு கடந்த 9-ம் தேதி மாலை வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று நள்ளிரவு சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியே எழுந்து சென்றார். அப்பொழுது அங்கே மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து நேற்று அவரது தந்தை கோபால் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×