search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடைகால கிரிக்கெட் திருவிழா
    X

    கோடைகால கிரிக்கெட் திருவிழா

    • பா.ம.க சார்பில் கோடைகால கிரிக்கெட் திருவிழா நடைப்பெற்றது.
    • 15 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 986 அணிகளில், 14 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பா.ம.க சார்பில் கோடைகால கிரிக்கெட் திருவிழா நடைப்பெற்றது.

    இத்திருவிழாவில் கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் நல்வழிபடுத்தும் விதமாக பா.ம.க மாநில தலைவர் அன்புமணிராமதாசின் ஆலோசனைப்படி மாவட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் வீரர்களுக்கும் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களுடன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

    15 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 986 அணிகளில், 14 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் பா.ம.க நகர செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் கணபதி ஊராட்சிமன்ற தலைவர் சுப்பிரமணி, முன்னாள் பாமக நகர தலைவர் ராஜவேல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிலம்பு, மாவட்ட துணைத் தலைவர் ராஜா , கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×