search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்- நுங்கு, பதனீர், ஜூஸ் விற்பனை தீவிரம்
    X

    சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்- நுங்கு, பதனீர், ஜூஸ் விற்பனை தீவிரம்

    • சென்னையில் வெயில் சுட்டெரித்து வருவதையொட்டி ஜூஸ் வியாபாரம் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது.
    • கோடை வெயிலுக்கு இதமான பதனீர் விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதையொட்டி சென்னை நடைபாதையோரங்களில் நுங்கு, இளநீர் மற்றும் ஜூஸ் விற்பனை களை கட்டியது. சென்னையில் நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம் தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் தர்பூசணி, பழரசம், மோர், ராகி கூழ், லெமன் ஜூஸ், கற்றாழை ஜூஸ் ஆகியவை விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது.

    சாலையோரங்களில் நடந்து செல்லும் மக்கள் வெயில் சூட்டை தணிக்க பல வகையான ஜூஸ்களை அருந்தி வருகிறார்கள்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் வெயில் சுட்டெரித்து வருவதை யொட்டி ஜூஸ் வியாபாரம் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க மக்கள் ஜூஸ் கடைகளை தேடி வருகிறார்கள். தற்போது உடலை பாதுகாக்க நுங்கு, இளநீர், தர்பூசணி பெரும் உதவியாக இருந்து வருகிறது.

    கோடை வெயிலுக்கு இதமான பதனீர் விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி பருகி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×