search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குன்னூர்-ஊட்டி சாலையில் விபத்து: சாலையோரம் நின்ற வாகனங்களில் பாய்ந்து சென்று விழுந்த கார்
    X

    குன்னூர்-ஊட்டி சாலையில் விபத்து: சாலையோரம் நின்ற வாகனங்களில் பாய்ந்து சென்று விழுந்த கார்

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அருவங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சட்டன் எஸ்டேட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 54) நேற்று இரவு குன்னூரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சின்ன கரும்பாலம் சதீஷ் (19), கவுதம் (19) ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு நேற்று மாலை ஆபிரகாம் (வயது 70) என்பவர் மனைவியுடன் காரை ஓட்டிவந்தார்.

    அப்போது பாய்ஸ் கம்பெனி அருகே வாகனம் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    இதில் காரில் இருந்த ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி நஜானா (66) ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து கணவன்-மனைவிக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×