search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 5 பேர் கைது
    X

    பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 5 பேர் கைது

    • கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நந்திவரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஹைதர் அலி (வயது 54), இவரது கடையில் சில தினங்களுக்கு முன்பு பிரியாணி கேட்டு 8 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டி கேட்ட கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் நந்திவரம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 29), அஸ்வின் (29), சுரேஷ் (29) மற்றும் சென்னை தரமணி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பிரகாஷ் (26), ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×