search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிதம்பரத்தில் கிராம குளத்திற்குள் புகுந்த முதலை மீட்பு
    X

    சிதம்பரத்தில் கிராம குளத்திற்குள் புகுந்த முதலை மீட்பு

    • சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் உள்ள குளத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் மீட்டனர்.
    • சுமார் 9 அடி நீளமுள்ள 145 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பூலாமேடு கிராம குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு அக்கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு, சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளர் ஞானசேகர், வனகாப்பாளர் அலமேலு மற்றும் நந்திமங்கலம் ராஜ் குழுவினர் உதவியுடன் சுமார் 9 அடி நீளமுள்ள 145 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

    Next Story
    ×