search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோதம் காரணமாக தகராாறு: பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
    X

    முன்விரோதம் காரணமாக தகராாறு: பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

    • கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.
    • காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அச்சிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசா (வயது24). இவர் தளியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கணேசன் (25). உறவினர்களான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணேசன், அவரது நண்பர்கள் கீச்சானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு (28), வேணு (18), விஜய் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.

    இதில் காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து சீனிவாசா தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன், ராமு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×