என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பேக்கரி உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் பறிமுதல்
- டவுன் குறுக்குத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பாளையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபடும் அந்த குழுவினர், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம், பரிசு பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்று சோதனை செய்கின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை டவுன் குறுக்குத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். காரில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் என்பவர் வந்தார். அவரது காரை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது அதில் ரூ.70 ஆயிரம் இருந்தது.
அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, நெல்லையில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருவதாகவும், வியாபாரம் விற்ற பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் ஏதும் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பாளையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்