search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்- டிரைவர் கைது
    X

    அன்னூர் அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்- டிரைவர் கைது

    • இளம்பெண் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
    • ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி துறையில் முதன்மை செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் தினமும் தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு பஸ்சிலேயே பயணித்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று காலை இளம்பெண் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.

    அப்போது பஸ்சை ஓட்டிச்சென்ற சிறுமுகையை சேர்ந்த 35 வயது டிரைவர் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பஸ் அன்னூருக்கு சென்றதும், பஸ்சை விட்டு இறங்கி நேராக அன்னூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×