search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது
    X

    ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது

    • ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.

    தச்சங்குறிச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே இருமுறை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×