search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கனகம்மாசத்திரம் அருகே பஸ் டயர் வெடித்து விபத்து- கல்லூரி மாணவன் படுகாயம்
    X

    கனகம்மாசத்திரம் அருகே பஸ் டயர் வெடித்து விபத்து- கல்லூரி மாணவன் படுகாயம்

    • பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது.
    • விபத்தில் மாணவன் ஹரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு தாலுகா கர்லம்பாக்கம் ஊராட்சி தாங்கல் காலனியை சேர்ந்தவர் ஹரி (வயது 26). இவர் திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடியில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.

    பஸ் கனகம்மாசத்திரம் அருகே உள்ள பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இந்த விபத்தில் மாணவன் ஹரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட சக பயணியர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதேபோல். திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (51). இவர் நேற்று முன்தினம் மாலை அருங்குளம் பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு செல்லும் தனியார் மினி பஸ்சில் ஏற முயன்ற போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், வலது கால் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த பாண்டியனை சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×