search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் விதிகளை மீறிய 12 வாகனங்களுக்கு அபராதம்
    X

    காஞ்சிபுரத்தில் விதிகளை மீறிய 12 வாகனங்களுக்கு அபராதம்

    • 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகரில் காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் அருகே காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தகுதி சான்று இல்லாத தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×