search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காஞ்சிபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி
    X

    காஞ்சிபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

    • காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தினேஷ் (வயது 26). இவர் பிறந்த நாள் மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் இதே தொழில் செய்யும் தனது நண்பரான குமரன் மகன் மற்றொரு தினேஷ் (27) என்பவருடன் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டையில் பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் செங்கழுநீரோடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பொன்னேரிக்ரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த குமரன் மகன் தினேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    விபத்து இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×