search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி
    X

    சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி

    • சென்னை துறைமுகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார்.
    • செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    ராயபுரம்:

    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் நேற்று இரவு சென்னை துறைமுகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார். அதே பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது செந்தில்குமார் மீது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×