என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மதுராந்தகம் அருகே அரசு பஸ்கள் மோதல்- ஒருவர் பலி
- திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
- படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சின் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
இதில் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (45) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்களில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்