search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுராந்தகம் அருகே அரசு பஸ்கள் மோதல்- ஒருவர் பலி
    X

    மதுராந்தகம் அருகே அரசு பஸ்கள் மோதல்- ஒருவர் பலி

    • திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
    • படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சின் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (45) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்களில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×