என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி வளாகத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
Byமாலை மலர்23 April 2023 11:45 AM GMT
- மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு செல்லும்போது திடீரென பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த மாணவர்கள் அலறியடித்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாடிப்படி கீழ் பகுதியில் மின்சார மீட்டர் அருகே மறைந்திருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X