என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மீஞ்சூர் அருகே ரெயில் நிலையத்தி்ல் கஞ்சா விற்றவர் கைது
Byமாலை மலர்13 May 2023 7:12 AM GMT
- ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
- போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது போலீசை கண்டதும் கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த பசுபதி (28) என்பதும், இவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X