search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டம்
    X

    மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டம்

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை பணிகள் ஊராட்சிகளுக்கு செய்ய முடியாமல் உள்ளதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அடுத்த மாதம் கூட்டத்தின் போது மீஞ்சூர் ஒன்றியத்திற்கு சி.எஸ். ஆர் நிதி வழங்கப்படாவிட்டால் கூட்டத்தை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தமிழ்செல்வி பூமிநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை பணிகள் ஊராட்சிகளுக்கு செய்ய முடியாமல் உள்ளதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்த மாதம் கூட்டத்தின் போது மீஞ்சூர் ஒன்றியத்திற்கு சி.எஸ். ஆர் நிதி வழங்கப்படாவிட்டால் கூட்டத்தை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதில் கவுன்சிலர்கள் சுமித்ராகுமார், பானு பிரசாத், கிருஷ்ணபிரியா வினோத், வெற்றி, சங்கீதா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×