search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    படப்பையில் பஸ்-லாரி மோதல்: 5 பேர் காயம்
    X

    படப்பையில் பஸ்-லாரி மோதல்: 5 பேர் காயம்

    • படப்பை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கனரக லாரி பஸ்சின் பக்கவாட்டில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிமங்கலம்:

    வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பி.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50). அரசு பஸ் டிரைவரான இவர் தாம்பரத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டக்டர் ஜெய்சங்கருடன் வேலூர் நோக்கி வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் படப்பை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சில் 60 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    படப்பை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கனரக லாரி பஸ்சின் பக்கவாட்டில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது. இதில் பஸ்சின் முன்பக்கம் கண்ணாடிகள் தூள் தூளாக நொறுங்கி சாலையில் சிதறியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×