search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
    X

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    • கட்டுப்பாட்டை இழந்த அங்குள்ள சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
    • மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள தாமரைக்குப்பம், புதூர் முதலாவது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ரிக்கேஷ் (வயது22). இவர், கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ரிக்கேஷ் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பரான உடன் படிக்கும் சாந்தகுமார்(22) என்பவரை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்றார். வழியில் மற்றொரு நண்பரை ஏற்றிக்கொண்டு கல்லூரியின் உள்ளே சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அங்குள்ள சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    இதில் ரிக்கேஷ் உள்பட உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் ரிக்கேஷ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×