என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
- மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- ஜெயகணேசுக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடைேய முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் தனபாண்டி. இவர் மரக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் ஜெயகணேஷ் (வயது 22). இவர் நேற்று இரவு வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
நள்ளிரவில் மர்மநபர்கள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதில் அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஜெயகணேசுக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடைேய முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்