search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொன்னேரியில் செல்போன் கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது
    X

    பொன்னேரியில் செல்போன் கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது

    • விசாரணை செய்ததில் செல்போன் கடைகளில் அடிக்கடி மிரட்டி பொருட்கள் வாங்குவதாகவும், வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.
    • கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அன்சாரி (40). நேற்று முன்தினம் கடைக்கு வந்த மர்ம நபர்கள் செல்போன் சார்ஜர், ஹெட்செட் கேட்டு வாங்கினார்கள்.

    கடை உரிமையாளர் பணம் கேட்டபோது மிரட்டி தாக்கி அடித்து பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர். அவர்கள் மீது கடை உரிமையாளர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொன்னேரி ஜீவா தெருவை சேர்ந்த சுதன் (26), பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அஜித் (21), பொன்னேரி அடுத்த காட்டாவூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21) என்பது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணை செய்ததில் செல்போன் கடைகளில் அடிக்கடி மிரட்டி பொருட்கள் வாங்குவதாகவும், வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.

    மேலும் தப்பி ஓடிய ரபிக் (22) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×