search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் பழங்கால சிலைகள், மணல்மேடு, பொருட்கள் கண்டுபிடிப்பு
    X

    காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் பழங்கால சிலைகள், மணல்மேடு, பொருட்கள் கண்டுபிடிப்பு

    • ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.
    • தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் பழங்கால சிலைகள், மணல்மேடு, சங்ககால பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளன. இவை ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.

    இந்த இடத்தை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வடக்குப்பட்டு கிராமத்தில் சங்க காலத்தை சேர்ந்த பானை ஓடு துண்டுகள், பழங்கால கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கல்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள வயல்வெளி வரப்பில் பழமையான சிவபெருமான் மணல் சிற்ப சிலை ஒன்றும் உள்ளது.

    இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிலை போல் உள்ளது. இது 7 அல்லது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மேலும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் லட்சுமி சிலை, அம்மன் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இரும்பு காலத்தை சேர்ந்த மணல்மேடு ஒன்றும் உள்ளது. எனவே இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×