search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகரில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    சேலம் மாநகரில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    சேலம்:

    தமிழகம் முழுவதும் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் குட்கா விற்பனை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநகரில் பல்வேறு இடங்களில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட நபர்களை கைது செய்து போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று சனிக்கிழமை வரை 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தொடர்ந்து குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த 25 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×