search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க. கொடி-கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்: சசிகலா பேட்டி
    X

    அ.தி.மு.க. கொடி-கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்: சசிகலா பேட்டி

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
    • ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    திண்டிவனம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று திண்டிவனம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதற்கு காரணம் காவல்துறையை 3 பிரிவுகளாக பிரித்ததுதான். ஒரே தலைமையின் கீழ் காவல்துறை இருந்தால் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் நெல் விதை இல்லாமல் தவிக்கிறார்கள். இது பற்றி உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்வதாக அந்த கட்சியினர்தான் கூறுகிறார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாக வளரவில்லை.

    தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவர்கள் குறுக்கீடு ஏராளமாக உள்ளது. இதனை கண்டிக்கிேறாம்.

    எனக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. எனவே, அ.தி.மு.க. கொடி மற்றும் கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×