search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூரில் மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடக்கம்
    X

    கடலூரில் மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடக்கம்

    • கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை.
    • சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது.

    கடலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக கொடுக்கும் பணி கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை. சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது.

    இதனால் பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    Next Story
    ×