search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தறிகெட்டு ஓடிய வேன் புளியமரத்தில் மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் காயம்
    X

    தறிகெட்டு ஓடிய வேன் புளியமரத்தில் மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாராக ஓடியது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடக்கும் திருமண விழாவிற்கு வேனில் 15-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நள்ளிரவு வந்தனர். வேனை சேலத்தை சேர்ந்த தினேஷ் ஓட்டினார்.

    இந்த வேன் இன்று காலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாராக ஓடியது. இதனால் வேனில் இருந்தவர்கள் அலறினர். தறிகெட்டு ஓடிய வேன் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பாகம் முழுவதும் நொறுங்கியது. வேனில் இருந்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்தை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுபற்றி தகவலை விருத்தாசம் போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது வேன் மரத்தில்மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×