search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழிங்கநல்லூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் திருட்டு
    X

    சோழிங்கநல்லூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் திருட்டு

    • ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் பால் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவர் உள்ளே இருந்து கூடுதலாக பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வெளியே அவற்றை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 576 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவர் மீதும் ஆவின் பால் நிறுவன பொது மேலாளர் சுஜாதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்ததாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×