search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்- சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
    X

    குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்- சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

    • நகரின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.
    • கழிவுநீர் கால்வாயை சரியாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் தற்போது ரோட்டிலேயே குளமாக தேங்கி கிடக்கிறது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்ட்டை சேர்ந்த பகுதி சரண்யா நகர். இங்கு சுமார் 40 குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.

    கழிவுநீர் கால்வாயை சரியாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் தற்போது ரோட்டிலேயே குளமாக தேங்கி கிடக்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி மையமாக இந்த பகுதி மாறி உள்ளது. எனவே குழந்தைகள் அதிகமாக உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்பது இந்த பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×