என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருவள்ளூர் அருகே கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து மரணம்
Byமாலை மலர்26 April 2023 8:00 AM GMT (Updated: 26 April 2023 8:00 AM GMT)
- கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்தார்.
- வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் குமார் (38) எலக்ட்ரிசியன். இவர் கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்தார்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மணவாளநகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X