search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவள்ளூர் அருகே கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து மரணம்
    X

    திருவள்ளூர் அருகே கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து மரணம்

    • கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் குமார் (38) எலக்ட்ரிசியன். இவர் கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்தார்.

    வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மணவாளநகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×