search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே காதணி விழாவுக்கு காரில் மதுப்பாட்டில்கள் கடத்தல்- வாலிபர் கைது
    X

    திண்டிவனம் அருகே காதணி விழாவுக்கு காரில் மதுப்பாட்டில்கள் கடத்தல்- வாலிபர் கைது

    • காரின் சீட்டுக்கு அடியில் 30 பெட்டிகளில் மதுப்பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • காரில் மதுப்பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் மெயின் ரோட்டில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரின் சீட்டுக்கு அடியில் 30 பெட்டிகளில் மதுப்பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில், காரை ஓட்டி வந்தவர் திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 22) என்றும், காதணி விழாவுக்கு மதுப்பாட்டில்கள் கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் சுதாகரை கைது செய்தனர். மதுப்பாட்டில்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×