search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் 2 பெண் குழந்தைகளின் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
    X

    கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் 2 பெண் குழந்தைகளின் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    • அரசு கல்லூரி எதிரே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்து, அறிவுரை கூறி, விக்னேைஷ முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரயிலில் அடிபட்டு இறந்த விவகாரத்தில், இறந்தவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்தா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா அரசு கல்லூரி எதிரே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த விக்னேஷ், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது விசாலாட்சி என்ற பெண்ணுடன், விக்னேஷ்க்கு தொடர்பு ஏற்பட்டு கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

    தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததும் அவர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்து, அறிவுரை கூறி, விக்னேைஷ முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர். இதனால், கள்ளக்காதலி விசாலாட்சி விக்னேசை பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ் கள்ளக்காதலியை பிரிந்த சோகத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கள்ளக்காதலிக்காக காதலித்து திருமணம் செய்த பெண் மற்றும் 2 பெண் குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×