search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
    X

    ஊத்துக்கோட்டை அருகே 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.
    • ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவுபூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவரது வீட்டில் பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது. அருகில் உள்ள சேகர் என்பவரது வீட்டில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், அரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து பென்னலூர் பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×