என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி ரூ.7 ¼ லட்சம் பணம் பறிப்பு
- இரவில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் துணிகரம்
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடவள்ளி,
கோவை சிறுவாணி சாலை பூலுவம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 40) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடையில் அதிகம் விற்பனையாகி இருந்தது. மொத்தம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகி இருந்தது. இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.
எனவே வசூலான பணத்தை நாளை (செவ்வாய்க்கி ழமை) தான் வங்கியில் கட்ட முடியும். இதனால் கடையில் பணத்தை வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்காது, எனவே தனது கட்டு ப்பாட்டில் வைத்திருக்கலாம் என சண்முகசுந்தரம் கருதினார். இதையடுத்து இரவு 11.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வடிவேலம் பாளையத்தை நெருங்கிய வேளையில் அங்குள்ள ஒரு சந்திப்பில் மோட்டா ர்சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்த னர். 3 பேரும் சேர்ந்து சண்முகசு ந்தரத்தை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் பண த்தை பையுடன் பிடுங்கிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் பணம் பறித்தவர்கள் யாரும் சிக்கவில்லை.
சண்முகசுந்தரம் பணத்து டன் செல்வதை நோட்டமி ட்டே மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறித்தது விசா ரணையில் தெரியவந்தது. பணம் பறித்த நபர்கள் என்பது குறித்து பேரூர் சரக டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்