என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- சின்னதம்பி நாடாரூர் விலக்கில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்வதற்கு பெரிதும் அச்சப்படுகின்றனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.
அதில் கள்ளம்புளி-சேர்ந்தமரம் சாலையில் சின்னதம்பி நாடாரூர் விலக்கில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைக்கு செல்லும் மது அருந்துபவர்களால் அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கடை தொடங்கியதில் இருந்து இதுவரையில் 8 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர் எனவும் சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்வதற்கு பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை மூடிவிட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்