search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
    X

    பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

    • புகைப்படம் எடுப்பதில் மோகம்
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் அனுசியா (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    அனுசியாவிற்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம். அதற்காக இயற்கை அழகுகளை, தனது நண்பர்களை புகைப்படம் எடுத்து கொடுப்பார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுசியா தான் புகைப்படம் எடுப்பதற்காக நண்பர்களிடம் உதவி கேட்டதாக தெரிகிறது.

    இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். சம்பவத்தன்று அனுசியா மீண்டும் நண்பர்களிடம் புகைப்படம் எடுப்பது குறித்து பேசினார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி கண்டித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த அனுசியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×