search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் இளம்பெண்  தற்கொலை
    X

    கோவையில் இளம்பெண் தற்கொலை

    • சத்தியபிரியா 2-வதாக கருவுற்றதாக தெரிகிறது.
    • கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது

    கோவை,

    கோவை பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி சத்தியபிரியா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் சத்தியபிரியா 2-வதாக கருவுற்றதாக தெரிகிறது.

    இதையடுத்து, கணவன் மனைவி 2 பேரும் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றனர். அப்போது கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தியபிரியா கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×