என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
- ராமகிருஷ்ணன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாதபோது ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி-எட்டையபுரம் ரோடு,கே.டி.சி.நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது37).இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகாமல் இருந்து வந்ததால் விரக்தியில் இருந்து வந்த ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை கம்பெனி நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டது. இதனால் கூடுதல் விரக்தி அடைந்து காணப்பட்ட ராமகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு அவரது தாய் நாகலட்சுமி வீடு திரும்பியுள்ளார். வீடு பூட்டி கிடந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையில் தூக்கு போட்ட நிலையில் ராமகிருஷ்ணன் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்