search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
    X

    தூத்துக்குடியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    • ராமகிருஷ்ணன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாதபோது ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-எட்டையபுரம் ரோடு,கே.டி.சி.நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது37).இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகாமல் இருந்து வந்ததால் விரக்தியில் இருந்து வந்த ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை கம்பெனி நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டது. இதனால் கூடுதல் விரக்தி அடைந்து காணப்பட்ட ராமகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு அவரது தாய் நாகலட்சுமி வீடு திரும்பியுள்ளார். வீடு பூட்டி கிடந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையில் தூக்கு போட்ட நிலையில் ராமகிருஷ்ணன் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×