search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர்.
    • அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை கிராம பகுதியில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். பின்னர் தப்பியோடிய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தடத்தாரை கிராமத்தைச் சேர்ந்த பேட்டப்பா மகன் ராகுல் 22 என்ற இளைஞரை கைது செய்து காஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×