search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 119-வது ஆண்டுவிழா-கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
    X

    ரெயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடிய காட்சி.

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 119-வது ஆண்டுவிழா-கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

    • 2012 செப்டம்பர் 21- ந்தேதி முதல் மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது.
    • ரெயில் ஓட்டுனர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னா டை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து செங்கோட்டை வரை 1903- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்டர் கேஜ் வழித்தடம் தொடங்கப்பட்டு 1904-ல் இந்த வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    அப்போது நிலக்கரி என்ஜின் மூலமாக ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நெல்லை -தென்காசி -கொல்லம் வழித்தடமானது இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக செல்வதால் இந்த வழித்தடத்தில் ெரயிலில் பயணிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    அகலப்பாதையாக மாற்றம்

    நெல்லை -தென்காசி மீட்டர் கேஜ் ரெயில் வழித்தடம் 31 டிசம்பர் 2008- ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிக்காக மூடப்பட்டது.

    பின்னர் 2012 செப்டம்பர் 21- ந்தேதி முதல் மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்த ரெயில் வழித்தடத்தில் சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட 16 ரெயில் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது ரெயில்வே மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் விரைவில் மின்சார என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்படும்.

    119 -வது ஆண்டு விழா

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 119-வது ஆண்டு விழா கேக் வெட்டியும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. ரெயில் ஓட்டுனர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னா டை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த ராமச்சந்திரன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர், தொழிலதிபர் சேவியர் ராஜன், தெற்கு ரெயில்வே மண்டல ஆலோ சனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

    Next Story
    ×